Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டெர்லைட் ஆலைப் பகுதி அருகே கனரக லாரியும், எதிர் திசையில் காரும் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கிக் கொண்டன.
இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் காத்து நின்றன. விபத்தில் உயிரிழந்தது யார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸின் பேரன் நீரேந்திரன், ரம்யா, ரம்யாவின் தோழி பார்கவி, கார் ஓட்டுநர் ஜோகன் ஆகியோர் என்று தெரியவந்துள்ளது.
இவர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர்.